அறிமுகம் : ரூ.1/-க்கு பிஎஸ்என்எல்-ன் புதிய இமெயில் சேவை, என்னென்ன நன்மைகள்.?


அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ஜெய்ப்பூரில் உள்ள டேட்டா இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்றுமுதல் நாள் ஒன்றிற்கு ரூ.1/-க்கு தனியார் இமெயில் சேவையை வழங்கும் திட்டத்தை தொண்டங்கியுள்ளது

இந்த ரூ.1/- மதிப்பிலான பிஎஸ்என்எல் கார்ப்பரேட் இமெயில் சர்வீஸ் திட்டமானது, அதன் வாடிக்கையாளர் தரவின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சேவைகளை வழங்குவதாகத் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சரி இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் என்ன.?



வருடாந்திர கட்டணத்தின் கீழ் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சேவையை பெற உங்களின் வலைத்தளங்களை நிறுவனம் குறிப்பிட்டுள்ள இரண்டு வகையான வருடாந்திர கட்டணத்தின் கீழ் இணைக்கவேண்டும்.

ரூ.365/- திட்டம் அதாவது , 1ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் திட்டத்தை பெற ரூ.365/- திட்டத்துடன் இணைய வேண்டும், இது ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகுமென்பது குறிப்பிடத்தக்கது (அதாவது நாள் ஒன்றிற்கு ரூ.1/- என்ற விலையில் சேவை கிடைக்கும்) மறுகையில் 10ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் திட்டத்தை பெற ரூ.999/- திட்டத்துடன் இணைய வேண்டும்.

வருடாந்திர தொகை ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தப்படக்கூடும் இந்த திட்டங்களின் கீழ் ஒரு நாளைக்கு 1 ஜிபி ஸ்டோரேஜ் உடன் தினமும் ரூ.1/- என்ற ஒரு பயனுள்ள விலையில் தொடங்குகிறது .10ஜிபி-க்கு மேற்பட்ட ஸ்டரோஜ் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.500/- என்ற வருடாந்திர தொகை செலுத்தி கூடுதலாக 5ஜிபி அளவிலான ஸ்டோரேஜ்தனை பெறலாம்.
இரட்டை அங்கீகரிப்பு அனைத்து மின்னஞ்சல் கணக்குகளும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் இரட்டை அங்கீகரிப்பு அம்சத்தை கொண்டிருக்கும். மேலும் ஹேக்கிங் சிக்கல்கள் இல்லாத மின்னஞ்சல் கணக்குகளை இந்த திட்டம் உருவாக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது. 

பிரதான விடயம் "தனியுரிமை" தான் இந்த சேவையின் பிரதான விடயம் என்று உயர்த்தி காட்டும் அரசு நடத்தும் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த சேவையை தொலைவேசிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் மொபைல் ஆப் வழியாகவும் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

கண்காணிக்கவோ, அணுகவோ அனுமதிக்கப்படாது. "எங்களின் இந்த மின்னஞ்சல் சேவை மிகவும் பாதுகாப்பாக உள்ளது மற்றும் இதர மின்னஞ்சல் சேவைகளைப்போலில்லாமல், இந்த சேவையின் கீழ் இமெயில்கள் ஸ்கேன் செய்யப்படாது. இ-மெயில் சொல்யூஷன் நிர்வாகி உட்பட எந்தவொரு மின்னஞ்சல் கணக்கையும் யாரும் கண்காணிக்கவோ, அணுகவோ அனுமதிக்கப்படாது. இந்த ஒட்டுமொத்த சேவையும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் வழங்கப்படுகின்றன. சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் அணுகல் வேகம் ஆகியவற்றை சிறந்த முறையில் இந்த சேவை வழங்கும்"என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் என்.கே.மேத்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.